அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினர் சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் திருப்பட்டினம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மாநில செயலர் மோகனவேல், மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலர் ஆர்.எஸ்.கருணாநிதி, வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காரைக்கால் மாவட்டம் மற்றும் நாகை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நவ்ஷத் தலைமையில், காரைக்கால் அரசலாற்றில் படகிலிருந்தவாறு கேக் வெட்டி கொண்டாடினர். காரைக்கால் மாவட்ட சிறுபான்மைத் துறைத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர், மாவட்ட மீனவரணித் தலைவர் ஏ.எம்.கே.அரசன், நாகை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை செயலர் சர்புதீன், நாகூர் நகரத் தலைவர் அப்துல்காதர், சேத்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படகில் சிறிது தூரம் பயணித்த இவர்கள், மீன்பிடித்து வந்த மீனவர்கள் மத்தியில் ராகுல் பிறந்தநாள் வாழ்த்து முழக்கம் எழுப்பினர்.