காரைக்காலில் அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள்

காரைக்காலில் வெவ்வேறு இடங்களில் கிடந்த அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்களை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரைக்காலில் வெவ்வேறு இடங்களில் கிடந்த அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்களை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலையம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் அரசு மருத்துவமனை அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலின்பேரில், சடலம்  மீட்கப்பட்டு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.  சிமென்ட் நிறத்தில் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்திருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனை பிரதான கதவு அருகே மேலும் ஒரு ஆண் நபர் (40 வயது மதிக்கத்தக்கவர்) கடந்த சனிக்கிழமை இறந்து கிடந்தார். இவர் நீலம் மற்றும் வெள்ளை நிற கோடு போட்ட முழுக் கை சட்டை, சிமென்ட் வண்ண பேண்ட் அணிந்திருந்தார். இவரது சடலமும் சவக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் வள்ளலார் நகர் பிள்ளைத்தோட்டம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சனிக்கிழமை இறந்து கிடந்தார். இவரது சடலமும் சவக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. பச்சை அரைக் கை சட்டை, கைலி அணிந்திருந்தார்.  இவர்கள் குறித்து தகவல் தெரிந்தோர், காரைக்கால் நகரக் காவல்நிலையம் } 222402 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com