கத்தியால் இளைஞரை குத்தியவர் கைது

காரைக்கால் அருகே கத்தியால் இளைஞரை குத்தி காயப்படுத்தியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

காரைக்கால் அருகே கத்தியால் இளைஞரை குத்தி காயப்படுத்தியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், மேலகாசாக்குடி தென்பாதிபேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). இதே பகுதியைச் சேர்ந்தவர் எடிசன் (20). ராஜ்குமாரின் தாயார் 100 நாள் வேலைக்கு சென்றுவருகிறார். இவர் எடிசனின் தாயாருடன் சேர்ந்து வேலைக்கு சென்றுவருவாராம்.
 இந்த நிலையில் ராஜ்குமார் அவரது தாயாரிடம் எடிசனின் தாயாருடன் வேலைக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். இதனால் ராஜ்குமாரிடம் புதன்கிழமை இரவு வாய்த்தகராறில் ஈடுபட்ட எடிசன், கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகார் தொடர்பாக நெடுங்காடு  போலீஸார் வழக்குப் பதிவு செய்து எடிசனை கைது
செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com