சாரம் சரிந்து தொழிலாளி சாவு

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கட்டட வேலையின்போது சாரம் சரிந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கட்டட வேலையின்போது சாரம் சரிந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதி ஆக்கூரை சேர்ந்தவர் விக்னேஷ் (18). இவர் காரைக்கால் மீன்டிபிடித் துறைமுகத்தில் நடக்கும் கட்டட கட்டுமானத்தில், சாரத்தில் நின்றுகொண்டு வேலை செய்துவந்தார். திடீரென  சாரம் சரிந்ததில் விழுந்தவர் தலையில் காயமடைந்து மயங்கினார். காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com