காரைக்காலில் திருடப்பட்ட லாரி

ஒருவர் கைதுகாரைக்கால், மே 20: காரைக்கால் துறைமுகப் பகுதியில் திருடப்பட்ட லாரியை சேலத்திலிருந்து போலீஸார் சனிக்கிழமை மீட்டுவந்தனர்.

ஒருவர் கைதுகாரைக்கால், மே 20: காரைக்கால் துறைமுகப் பகுதியில் திருடப்பட்ட லாரியை சேலத்திலிருந்து போலீஸார் சனிக்கிழமை மீட்டுவந்தனர்.
நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் கடந்த மாதம் ஏப். 28-ஆம் தேதி காரைக்கால் தனியார் துறைமுகம் செல்லும் சாலையில் தமது லாரியை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர் 30-ஆம் தேதி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல்வேறு பகுதிகளில் தேடிவிட்டு திருமலைராயன்பட்டினம் காவல்நிலையத்தில் மே 5-ஆம் தேதி புகார் அளித்தார்.
புகாரின்பேரில் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து லாரியை தேடிவந்தனர். இந்த நிலையில் மர்மமான முறையில் ஒரு லாரி சேலத்தில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார் சேலம் சென்று பார்த்தபோது, லாரி பெயிண்ட் மாற்றப்பட்டு வைக்கோல் போட்டு மூடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்ததோடு, சேலம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரை கைது செய்து காரைக்காலுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், லாரியை திருடிய நபர்கள், வீட்டு கொல்லைப் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதில் 2 பேர் ஈடுபட்டதாக தெரியவருவதாக அவர் போலீஸாரிடம் கூறியுள்ளார்.
இவரிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்படுவதோடு, அவர் தெரிவித்த தகவலின்பேரில் மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com