பிரதமர் உரையை காரைக்கால் வானொலி நிலையம் ஞாயிற்றுக்கிழமை (மே 28) ஒலிபரப்பு செய்யவுள்ளது.
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி மற்றும் நிலையத் தலைவர் நா. தமிழ்வாணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் "மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் 32-ஆவது பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் உரையின் தமிழாக்கத்தை சென்னை வானொலி நிலையம் அதே நாள் இரவு 8 மணிக்கு மறு ஒலிபரப்பு செய்கிறது. இதை நாட்டில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பக் கேட்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.