பிரதமர் உரை காரைக்கால் வானொலியில் நாளை ஒலிபரப்பு

பிரதமர் உரையை காரைக்கால் வானொலி நிலையம்  ஞாயிற்றுக்கிழமை (மே 28) ஒலிபரப்பு செய்யவுள்ளது.

பிரதமர் உரையை காரைக்கால் வானொலி நிலையம்  ஞாயிற்றுக்கிழமை (மே 28) ஒலிபரப்பு செய்யவுள்ளது.
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி மற்றும் நிலையத் தலைவர் நா. தமிழ்வாணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் "மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் 32-ஆவது பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் உரையின் தமிழாக்கத்தை சென்னை வானொலி நிலையம் அதே நாள் இரவு 8 மணிக்கு மறு ஒலிபரப்பு செய்கிறது. இதை நாட்டில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பக் கேட்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com