அங்கன்வாடி ஊழியர்களின் பணி பாராட்டுக்குரியது: எம்எல்ஏ

அங்கன்வாடி ஊழியர்களின் பணிகள் பாராட்டுக்குரியன என சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா கூறினார்.

அங்கன்வாடி ஊழியர்களின் பணிகள் பாராட்டுக்குரியன என சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா கூறினார்.
காரைக்கால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் குழந்தைகள் தின விழா காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் பலர், பல்வேறு வேடமிட்டு வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா கலந்துகொண்டார். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி அவர் பேசும்போது,  நிகழ்ச்சியில் 122 அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். அங்கன்வாடி மையத்தில் மழலையர்களை பராமரிப்பதில் மட்டும் அல்லாது, அரசு தரப்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தரப்படும் திட்ட உதவிகளை வழங்கி, சரியான ஆலோசனைகளை வழங்கி வருகிறீர்கள். அங்கன்வாடி ஊழியர்களின் பணி மகத்தானது. குறிப்பாக பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பாக அங்கன்வாடி மையத்தில் சேர்க்கின்றனர். பெற்றோர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக அங்கன்வாடி ஊழியர்கள், மழலையர்களுக்கு  அடிப்படைக் கல்வி, விளையாட்டு, ஊட்டச் சத்து மிக்க உணவுகளை வழங்கி பராமரிக்கும் செயல் மேலும் வலிமைப் பெற வேண்டும் என்றார்.
மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ் கலந்துகொண்டு, குழந்தைகளை வாழ்த்திப் பேசினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலர் சத்யா, கண்காணிப்பாளர் பி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உருவப் படத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர், கூடுதல் ஆட்சியர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com