காரைக்காலில் சமுதாயக் கூடம் திறப்பு

காரைக்காலில் குடியிருப்புப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் புதன்கிழமை திறந்து வைத்தார்.

காரைக்காலில் குடியிருப்புப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட நேரு நகர் 6-ஆவது குறுக்குத் தெரு அருகேயுள்ள வள்ளலார் தெருவில், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 21.55 லட்சத்தில் புதிதாக சமுதாயக் கூடம் நகராட்சி நிர்வாகம் மூலம் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 100 பேர் பங்கேற்கும் வகையில் சிறிய திருமண மண்டபம் போன்ற அமைப்பில், 2 அறைகள், கழிப்பறை வசதிகளுடன் சமுதாயக் கூடம்  கட்டப்பட்டுள்ளது. சமுதாயக் கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
 நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் டி. சுதாகர், செயற் பொறியாளர் ராமதாஸ், உதவிப் பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com