காரைக்கால் பாரதியார் கிராம வங்கியில் ஆதார் சேவை  தொடக்கம்

காரைக்கால் பாரதியார் கிராம வங்கி கிளையில் ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

காரைக்கால் பாரதியார் கிராம வங்கி கிளையில் ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
காரைக்கால் நகரப் பகுதி முல்லை நகரில் செயல்படும் புதுவை பாரதியார் கிராம வங்கி கிளையில் ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன்  மையத்தை திறந்துவைத்து, ஆதார் பதிவை தொடங்கிவைத்தார். இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, காரைக்காலில் ஏற்கெனவே 4 ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. தற்போது தொடங்கிய மையத்தோடு 5-ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இனிமேல் ஆதார் சேவை மையங்கள் அரசு அலுவலகங்களிலும், அரசுத்துறையினரின் மேற்பார்வையில்தான் செயல்படும்.
இங்கு திறக்கப்பட்ட மையத்தின் மூலம் புளியங்கொட்டை சாலை மற்றும் சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பயனடைவர் என்றார்.
மையம் திறந்த நாளில் புளியங்கொட்டை சாலையில் உள்ள  அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவை பாரதியார் கிராம வங்கித் தலைவர் மனோகரன், வங்கி கிளை மேலாளர் எஸ்.ஞானப்பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com