தொழிற்சாலை அமைக்க முன்வருவோருக்கு சலுகைகளை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : புதுச்சேரி அரசு, தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலைகள் நிறுவ நிலம், கட்டடம் ஆகியவை வாங்க, குத்தகை விடுதல், அடமானம் வைத்தல் போன்றவற்றுக்கு முத்திரை வரி 100 சதவீதம் விலக்களித்துள்ளது. இந்த விவரங்களை அறிய காரைக்கால் அரசு இணையதளத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 25.9.2017 அன்று வெளியிட்ட அறிவிப்பை பார்த்து பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.