வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

காரைக்கால் அருகே மேலகாசாக்குடியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

காரைக்கால் அருகே மேலகாசாக்குடியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம், மேலகாசாக்குடி மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் லேன்போஸ் (55). விவசாயியான இவர், வெள்ளிக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு நெடுங்காடு பகுதிக்குச் சென்றார். சில மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, வாசல் கதவு உள்தாழிட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  வீட்டின் கொல்லைப்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நெடுங்காடு காவல்நிலையத்துக்கு புகார் அளித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் 4 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. காரைக்காலில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் ஜெயபால் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com