காரைக்கால் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை மாலை உறியடி உத்ஸவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை மாலை உறியடி உத்ஸவம் நடைபெற்றது. ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பட்டார். உறியடி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா சிறப்பு குறித்து உ.வே.கு.அரங்கநாதாச்சாரியார் சுவாமிகள் பக்தர்களுக்கு விளக்கி உரையாற்றினார். நிகழ்ச்சியில் கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் நிர்வாகம், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்.