உலக சுற்றுலா தின ஆலோசனைக் கூட்டம்

உலக சுற்றுலா தினம் வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தலைமையில், காரைக்கால் பகுதியில் செயல்படும் மருத்துவம், பொறியியல்

உலக சுற்றுலா தினம் வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தலைமையில், காரைக்கால் பகுதியில் செயல்படும் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பகுதியில் சுற்றுலாவினரை ஈர்க்கவும், சுற்றுலா தினத்தில் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மகிழ்வுடன் இருக்கும் வகையில் எந்த மாதிரியான செயல்பாடுகள் மேற்கொள்ளலாம் என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கிடையே இசை, நடனம், கலாசாரம் தொடர்பான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. செப். 27-இல் காரைக்கால் கடற்கரையில் பொதுமக்கள் திரளாக பங்கேற்கக்கூடிய வகையில் சுற்றுலா தின நிகழ்ச்சி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி, வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து மற்றும் 13 கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சுற்றுலாத்துறையைச் சேர்ந்த முத்து செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com