காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் கால்பந்து போட்டி தொடக்கம்

காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் செப். 25-ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய கால்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் செப். 25-ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய கால்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
தேசிய விளையாட்டு தின கால்பந்து போட்டி -2017, காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி விளையாட்டுத் துறை சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையில் தொடங்கப்பட்டது. கல்லூரி மைதானத்தில் காட்சிப் போட்டியாக விநாயகா மிஷன்ஸ் செவிலியர் கல்லூரி ஏ அணியும், பி அணியும் கலந்துகொண்டு விளையாடின.
போட்டியை மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிôகரி ஈஸ்வரராஜ் தொடங்கிவைத்தார். வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய போட்டி லீக் முறையில் நடத்தப்படவுள்ளதாகவும், 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளதாக விளையாட்டுத் துறையினர் தெரிவித்தனர். போட்டி நிறைவான 25-ஆம் தேதி விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக துணைத் தலைவர் என்.வி. சந்திரசேகரன் கலந்துகொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கவுள்ளார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி விளையாட்டுத் துறைத் தலைவரும், முதுநிலை உடற்கல்வி இயக்குநருமான ஆர். ஜான்சன்ராஜ் ரமேஷ் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com