ஆசிபா கொலை சம்பவம்:  தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க

காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
  காரைக்கால் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமை வகித்தார்.  தமுமுக மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன், மாவட்ட செயலாளர் கமால் ஹூசேன்,
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இ.காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், எஸ்.டி.பி.ஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத், காரைக்கால் மக்கள் முன்னணி, ந.ம.இ.ஐ. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள், தமுமுகவின் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.  மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com