திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கலைஞர்கள் மாமன்றத்தினர் அஞ்சலி

காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் சார்பில், மறைந்த திமுக தலைவர் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் சார்பில், மறைந்த திமுக தலைவர் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாமன்ற ஆலோசனைக் குழுத் தலைவர் காரை சுப்பையா தலைமை வகித்தார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு மாமன்ற நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மாமன்றத் தலைவர் எஸ்.எஸ். ஹாஜாமெய்தீன், செயலர் நடேச வைத்தியநாதன், அமுதா ஆர். ஆறுமுகம், பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தி, கருணாநிதியின் கலைச் சேவை உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் குறித்து புகழாரம் சூட்டிப் பேசினர். இசை வேளாளர் சங்கத் தலைவர் டி.ஆர். பாலசுப்ரமணியன், செயலர் கே. பலராமன், பட்டிமன்றப் பேச்சாளர் வைஜெயந்திராஜன், செல்லூர் மணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமன்ற துணைத் தலைவர் த. தங்கவேலு, பொருளாளர் டி. மோகன், இணைச் செயலர் பி. புஷ்பராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com