காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை இருதயவியல், நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதமிரு சனிக்கிழமை புதுச்சேரி ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறுகிறது. 18-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் முகாமில் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.