காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தின் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச. 11) காரைக்காலில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மின் துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
காரைக்காலுக்கு நேரடியாக நெய்வேலியிலிருந்து மின்சாரம் பெற, புதிதாக பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தில் 230 கேவி லைன் அமைக்கும் பணியை பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
நிலையத்தில் பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதால், காலை 9 முதல் மாலை 6 மணி வரை காரைக்கால் பகுதி நண்டலாறு முதல் காரைக்கால் மதகடி வரை மற்றும் பூவம், மண்டபத்தூர், அக்கம்பேட்டை, வரிச்சிக்குடி, கோட்டுச்சேரிமேடு, கோட்டுச்சேரி, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு, பிள்ளைத்தெருவாசல், தருமபுரம், புதுத்துறை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.