2 மாநிலத் தேர்தல் வெற்றி: காரைக்காலில் காங்கிரஸார் கொண்டாட்டம்

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதையொட்டி,

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதையொட்டி, காரைக்காலில் காங்கிரஸார் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம்  ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய   2 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றதையொட்டி, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியினர் கூடி தேர்தல் வெற்றி குறித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர், மாதா கோயில் வீதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே பாரதியார் சாலையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸார் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் அ.பாஸ்கரன், வடக்குத் தொகுதி தலைவர் ஆர்.பி.சந்திரமோகன், நிர்வாகிகள் மோகனவேல், சிங்காரவேல், பஷீர், எல்.எஸ்.பி.சோழசிங்கராயர், சின்னத்தம்பி என்கிற அப்துல் காதர், ஏ.எம்.கே.அரசன், நாகரத்தினம், என்.ஜி.ஆர்.இளங்கோவன், ஜெ.சிவகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com