மகா சிவராத்திரி: திருநள்ளாறில்  தங்க ரிஷப வாகனத்தில்  தர்பாரண்யேசுவரர் வீதியுலா

மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத  ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் வீதியுலா புதன்கிழமை நடைபெற்றது.

மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத  ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் வீதியுலா புதன்கிழமை நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை  நான்கு  கால பூஜைகள்  நடைபெற்றன. நான்காம் கால பூஜை முடிந்த பிறகு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை, ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தவாறு வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.    . திருநள்ளாறு கோயில் கெய்தான் மண்டபத்தில் விடிய விடிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.   பல்வேறு பகுதிகளில் உள்ள சிவ தலங்களில் வழிபாடு செய்யும் நோக்கில், பக்தர்கள் பேருந்து, வேன், கார்களில் திருநள்ளாறு மற்றும் காரைக்காலின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.
நிகழ்ச்சியில்  கோயில் நிர்வாக அலுவலர் ஏ.விக்ராந்த் ராஜா, தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோன்று காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ சோமநாதர், ஸ்ரீ பார்வதீசுவரர், ஸ்ரீ அண்ணாமலையீசுவரர், ஸ்ரீ ஒப்பிலாமணியர், தருமபுரம் ஸ்ரீ யாழ்முறிநாதர், திருவேட்டைக்குடி 
ஸ்ரீ திருமேனியழகர், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரர், ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர், தலத்தெரு ஸ்ரீ சிவலோகநாதசுவாமி உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com