அடையாளம் தெரியாத ஆண் சடலம்

திருப்பட்டினம் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பட்டினம் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூர் ரங்கையா மடத்துக்குப் பின்புறம் வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாகக் கிடப்பதாக திருப்பட்டினம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
போலீஸார் அந்த பகுதிக்கு சென்று, சடலத்தை மீட்டு காரைக்கால் மருத்துவமனை சவக் கிடங்கில் வைத்துள்ளனர்.
உயிரிழந்தவர் 5.5 அடி உயரம், மாநிறம், கோடு போட்ட வெள்ளை நிற அரைக்கை சட்டை, கிரே நிறத்தில் கட்டம் போட்ட கைலி உடுத்தியிருந்தார். வலது கையில் எம் எக்ஸ் என்ற எழுத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது.
இவர் யார் என விவரம் தெரியவில்லை. விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து விவரம் தெரிந்தோர் திருப்பட்டினம் காவல்நிலையத்தை 04368- 233480 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com