காரைக்கால் மின் நுகர்வோர் கட்டண பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் என மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் மின் துறை மூலம் மின் நுகர்வோருக்கு மின் தடை குறித்து குறுந்தகவல் மூலம் தகவல் அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மின் நுகர்வோர் தங்களது செல்லிடப்பேசி எண்ணை அருகில் உள்ள மின் துறை இளநிலைப் பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மாவட்டத்தில் மின் நுகர்வோர் தங்களது மின் கட்டண பாக்கித் தொகையை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால் எந்தவித முன்னறிவிப்புமின்றி மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.