திருநள்ளாறு தேரோட்டத்தால் காரைக்காலில் முமு அடைப்புப் போராட்டம் இல்லை

திருநள்ளாறு தேரோட்டத்தால் காரைக்காலில்  முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிட்டு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருநள்ளாறு தேரோட்டத்தால் காரைக்காலில்  முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிட்டு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம்போல இருந்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக சார்பில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புதுச்சேரியிலும் இதனை ஏற்று  போராட்டத்திற்கான அறிவிப்பை மாநில  திமுக செய்தது. காரைக்கால் மாவட்டத்திலும் இந்தப்  போராட்டம் நடைபெறவேண்டிய நிலையில், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், இதை காரணம் காட்டி காரைக்காலில் திமுக  முழு அடைப்புப் போராட்டத்தை கைவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தும் என மாவட்ட திமுக அறிவிப்பு செய்தது.
இதனால் காரைக்கால் மாவட்டத்தில் வழக்கம்போல கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கின. தமிழக அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
 புதுச்சேரியிலும்,  அண்டை மாவட்டங்களிலும்  முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டும், காரைக்காலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com