காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் 6 மற்றும் 9 -ஆம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
காரைக்கால் ராயன்பாளையத்தில் உள்ள நவோதயா வித்யாலயாவில் (இருபாலர் பயிலும் உறைவிடப் பள்ளி) 2019-20 -ஆம் கல்வியாண்டில், 6 மற்றும் 9 -ஆம் வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2018. மேலும் விவரங்களை www.navodaya.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.