பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியோருக்கு அக்.3 முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு ஜூன், ஜூலையில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை (பத்தாம் வகுப்பு) சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு, ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றை வரும் அக்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் அந்தந்த தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.