துணைத் தேர்வு எழுதியோருக்கு அக்.3 முதல் மதிப்பெண் சான்று வழங்கல்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2  துணைத் தேர்வு எழுதியோருக்கு அக்.3 முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2  துணைத் தேர்வு எழுதியோருக்கு அக்.3 முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  நிகழாண்டு ஜூன், ஜூலையில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை (பத்தாம் வகுப்பு) சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு, ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றை வரும் அக்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் அந்தந்த தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com