jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

By நாகப்பட்டினம்  |   Published on : 14th November 2015 07:01 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

சென்னை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கு விசாரணையின் நிறைவில், வேளாங்கண்ணி பேருந்து நிலையம், உத்திரியமாதா கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, நாகை வருவாய்க் கோட்டாட்சியர் ஜெயராஜ், கீழ்வேளூர் வட்டாட்சியர் சுந்தரவடிவேல் ஆகியோர் மேற்பார்வையில் வருவாய்த் துறை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலை வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிலர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் மேற்கொள்ள முயன்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் தங்கள் விடுதிகளில் தங்கியுள்ள வெளியூர் பயணிகள் பாதிக்கப்படக்கூடும் என விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, வருவாய்க் கோட்டாட்சியர் ஜெயராஜ், விடுதி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். பேச்சுவார்த்தையின் நிறைவில்,  ஆக்கிரமிப்பில் உள்ள விடுதிக் கட்டங்களை விடுதி உரிமையாளர்கள் வரும் ஓரிரு நாள்களில் தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்வதெனவும், முதல் கட்டமாக எளிதில் அகற்றக் கூடிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

பின்னர், விடுதிகளின் முன்புறங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரைகளை அகற்றும் பணி வருவாய்த் துறை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தலைமையில், வேளாங்கண்ணி  போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இப்பகுதிகளில் சுமார் 26 ஆயிரம் சதுர அடி பரப்பில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேலும் சில நாள்கள் நடைபெறும் எனவும் வருவாய்த் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

O
P
E
N

புகைப்படங்கள்

மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்

வீடியோக்கள்

தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்