விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாகையில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் தெரிவித்துள்ளது.
நாகையில் ஏப். 21-ஆம் தேதி நடைபெற்ற இந்திய வர்த்தக தொழிற்குழும சிறப்புக் கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்கள், சேவை சங்கங்கள் பங்கேற்று இந்த முடிவை எடுத்துள்ளது எனவும், இதன்படி ஏப். 25-ஆம் தேதி நாகையில் அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் எனவும் இந்திய வர்த்தக தொழிற்குழுமத் தலைவர் எஸ். சாகுல் அமீது, செயலாளர் ஜி. மனோகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.