வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் நாடிமுத்து உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு, இலக்கிய மன்றம், பாராட்டு, பணி ஓய்வு ஆகிய ஐம்பெரும் விழாவுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சோ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முகவர் அ.மதியரசு வரவேற்றார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஊராட்சி முன்னாள் தலைவர் ஆர். துரைராஜ், ஆசிரியர் விஜயபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.
பள்ளி வளர்ச்சிக்காக ரூ.50,000 நிதி அளித்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.சிவசுந்தரம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர் இயக்க அமைப்புகளின் நிர்வாகிகள் புயல் சு.குமார், தெ.இராமசாமி, கு.வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.