சீர்காழியை அடுத்த காத்திருப்பு(சொர்ணபுரம்) சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீசுவரர் கோயிலில் அட்சய திருதியை ஏக தின லட்சார்ச்சனை வெள்ளிக்கிழமை (ஏப். 28) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக, கலச ஸ்தாபனம், ருத்ர ஹோமம், பூர்ணாஹுதி நடைபெறுகிறது. பின்னர் சுவாமி - அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று லட்சார்ச்சனை தொடங்குகிறது. மாலை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, சொர்ணாஞ்சலி நடக்கிறது.