மன்னார்குடி அடுத்த மூணாம்சேத்தி ஊராட்சியில், தூய்மை பாரத இயக்கம் சார்பில், சனிக்கிழமை முழு சுகாதார விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி அலுவலக கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) எஸ்.சிவக்குமார் தலைமை வகித்தார்.
ஊராட்சி அலுவலகத்திலிருந்து பேரணி தொடங்கியது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.மோகன், ஊராட்சி செயலர் கே.கலியபெருமாள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், கிராம கமிட்டியினர், துப்புரவுப் பணியாளர்கள், துப்புரவு காவலர்கள் கலந்துகொண்டனர்.