எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, வேதாரண்யத்தை அடுத்த 5 கிராமங்களில் பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகக்குடையான், கத்தரிப்புலம், செட்டிப்புலம், கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு ஆகிய கிராமங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, பெண்களுக்கு சேலைகள் வழங்கி அப்பணியைத் தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய அதிமுக செயலர் ஆர். கிரிதரன், வழக்குரைஞர் தங்க. கதிரவன், நிர்வாகிகள் வி. ராதாகிருஷ்ணன், மா. சரவணன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.