பாபர் மசூதி இடிப்பு தினம்:  மஜக, தமுமுக, எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமுமுக மற்றும் எஸ்டிபிஐ சார்பில் நாகையில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமுமுக மற்றும் எஸ்டிபிஐ சார்பில் நாகையில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  
பாபர் மசூதி வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
மஜக... மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) சார்பில் நாகை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் நாகை (தெற்கு) மாவட்டச் செயலாளர் செ. செய்யது ரியாசுதீன் தலைமை வகித்தார். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெ.எஸ். ரிபாய் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
கட்சியின் மாவட்டப் பொருளாளர் பரக்கத் அலி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஹமீது ஜெகபர், ஷேக் மன்சூர், யூசுப்தீன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், மனிதநேய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
தமுமுக... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டச் செயலாளர் ஏ.எம். ஜபருல்லா தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஓ.எஸ். இப்ராகிம் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
தமுமுக இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாநிலச் செயலாளர் ஒய். சாதிக் பாஷா, தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் பொதக்குடி தாஜூதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 
தமுமுக மாவட்டப் பொருளாளர் முகமது நெய்னா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் எம். சிராஜூதீன், அஸ்ரப் அலி, அப்துல்காதர், மமக மாவட்டப் பொருளாளர் ஏ. சாதிக் பாஷா, துணைச் செயலாளர்கள் எம். முகமது ரபீக், முகமது சுலைமான் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எஸ்டிபிஐ... இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்டிபிஐ) சார்பில் நாகை அபிராமி அம்மன் திருவாசல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் அக்பர் அலி தலைமை வகித்தார். கட்சியின் மாநிலப் பேச்சாளர் இமாம் ஹஸ்ஸான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். 
பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவர் அஷ்ரப் அலி, சட்டப் பேரவைத் தொகுதி தலைவர்கள் முகமது அபுஹாசிம் (நாகை),  மெய்தீன் (கீழ்வேளூர்), பெண்கள் அமைப்பு மாவட்டத் தலைவர் சுலைஹா, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா மாவட்டச் செயலாளர் ரபீக்  மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள், உறுப்பினர்கள்,  அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  
சீர்காழியில்... சீர்காழி  பழைய பேருந்து நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் எம். ஷபீஸ்அகமது தலைமை வகித்தார்.
இதில் மாவட்டச்  செயலாளர்கள்  சபீர்அகமது, முகம்மது ஜியாவுதீன், மாவட்டப் பொருளாளர் அப்துல்அஜீஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது  கமாலுதீன், நாகை தெற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.சேக் அலாவுதீன், மாநில பொதுச் செயலாளர் யு.பி. அஜித்ரஹ்மான்,  மாவட்ட பொதுச் செயலாளர்  வி.எஸ். கண்ணன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நாகை மாவட்ட தலைவர் நவாஸ்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com