திருவெண்காட்டில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் திமுக சார்பில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருவெண்காட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஊராட்சிச் செயலர் துரைராஜன், ஒன்றியச் செயலர் சசிக்குமார், ஒன்றியப் பொருளாளர் பாண்டியன், ஊராட்சி முன்னாள் தலைவர் சிவப்பிரகாசம், துணைச் செயலர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.