அம்பேத்கர் நினைவு நாள் போட்டி

சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கொள்ளிடம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், எருக்கூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மணலகரம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் நோட்டுகள், பேனாக்கள் பரிசாக வழங்கப்பட்டன. சீர்காழி தொகுதி செயலர் தாமு. இனியவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய அமைப்பாளர் பிரபு, தொகுதி துணைச் செயலர் சங்கர், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சந்திரமோகன், கனிவண்ணன், வழக்குரைஞர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com