பூம்புகாரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.
பூம்புகாரில் இயங்கி வரும் நம்பிக்கையின் பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை நிறுவன ஒருங்கிணைப்பாளர் டெய்ஸி தொடங்கி வைத்தார். இதில் நிறுவன பணியாளர்கள் பரமேஸ்வரி, எட்வீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணி தருமகுளம், மந்தகரை, பூம்புகார் வழியாகச் சென்றது.