சீர்காழியிலிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை பயணத்தை பக்தர்கள் வியாழக்கிழமை தொடங்கினர்.
சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சுமார் 33 பேர் ஆண்டுதோறும் சபரிமலைக்கு சீர்காழியிலிருந்து பாதயாத்திரையாகச் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்புவது வழக்கம். அதன்படி, 14-ஆம் ஆண்டு பாத யாத்திரைப் பயணத்தை நடராஜ குருசாமி தலைமையில், வியாழக்கிழமை சீர்காழி ஆபத்துகாத்த விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து தொடங்கினர்.
இவர்கள் மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம் வழியாக நடந்து சென்று 15-ஆவது நாளில் சபரிமலை பம்பை பகுதியை அடைந்து, பிறகு மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டுத் திரும்புகின்றனர்.