சபரிமலைக்கு பாதயாத்திரை

சீர்காழியிலிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை பயணத்தை பக்தர்கள் வியாழக்கிழமை தொடங்கினர்.

சீர்காழியிலிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை பயணத்தை பக்தர்கள் வியாழக்கிழமை தொடங்கினர்.
சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சுமார் 33 பேர் ஆண்டுதோறும் சபரிமலைக்கு சீர்காழியிலிருந்து பாதயாத்திரையாகச் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்புவது வழக்கம். அதன்படி, 14-ஆம் ஆண்டு பாத யாத்திரைப் பயணத்தை நடராஜ குருசாமி தலைமையில், வியாழக்கிழமை சீர்காழி ஆபத்துகாத்த விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து தொடங்கினர். 
இவர்கள் மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம் வழியாக நடந்து சென்று 15-ஆவது நாளில் சபரிமலை பம்பை பகுதியை அடைந்து, பிறகு மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டுத் திரும்புகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com