தங்கக் கட்டிகள் கடத்தல்?:  6 பேரிடம் விசாரணை

தங்கக் கட்டிகள் கடத்தலில் ஈடுபட்டதாக 6 பேரிடம்  சிறப்புப் படை போலீஸார் புதன்கிழமை இரவு விசாரணை  நடத்தினர்.

தங்கக் கட்டிகள் கடத்தலில் ஈடுபட்டதாக 6 பேரிடம்  சிறப்புப் படை போலீஸார் புதன்கிழமை இரவு விசாரணை  நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது: நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள பூம்புகார் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (எ) சுதன் (28). அவரது உறவினர் பாக்கியராஜ் மற்றும் தரங்கம்பாடியைச் சேர்ந்த செண்பகராஜ் உள்ளிட்டோர் கடந்த சில நாள்களுக்கு முன்னர், அவர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவின்பேரில், இலங்கை பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக 120 தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும், அவற்றை கடத்தல் தலைவனிடம் முழுமையாக ஒப்படைக்காமல் 37 தங்கக் கட்டிகளை மட்டும் ஒப்படைத்ததாகத் தெரிகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த கடத்தல் தலைவன், சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (30) உள்ளிட்டோரை பூம்புகார் பகுதிக்கு அனுப்பி வைத்து, பாக்கியராஜியிடம் உள்ள தங்கக் கட்டிகளை பெற்று வரும்படி கூறியதாகத் 
தெரிகிறது.  
ஆனால், அங்கு பாக்கியராஜ் இல்லாததால், அவரது உறவினர் ஜெகன் மற்றும் செண்பகராஜன் ஆகியோரை ராஜா உள்ளிட்டவர்கள் காரில் அடைத்து வைத்து, புதன்கிழமை சென்னைக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
கடலூர் அருகே சென்றபோது காரிலிருந்து ஜெகன் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கடலூர்  மாவட்ட போலீஸார் ஜெகன் மற்றும் காரிலிருந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரம் 
தெரியவந்தது.
இதையடுத்து, கடலூர் மாவட்ட போலீஸார், நாகை மாவட்ட சிறப்புப் படை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சிறப்புப் பிரிவு போலீஸார் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த ஜெகன், பிரபு, கஜேந்திரன், தரங்கம்பாடியைச் சேர்ந்த செண்பகராஜா, எண்ணூரைச் சேர்ந்த ராஜா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com