தரங்கம்பாடி பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழா

பொறையாறு அருகேயுள்ள தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொறையாறு அருகேயுள்ள தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சைமன் மகிபாலன் தலைமை வகித்தார்.  மறைமாவட்டத் தலைவர் பாஸ்டர் நவராஜ் ஆபிரகாம் முன்னிலை வகித்து, கிறிஸ்து பிறப்பு குறித்துப் பேசினார்.  டி.பி.எம்.எல். கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.  கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில்  மாணவர்கள்  பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.  
இதில்,  தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் கஸ்தூரிபாய் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com