பள்ளி மாணவியை காணவில்லை எனப் புகார்

பள்ளி மாணவி காணாமல்போனதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவி காணாமல்போனதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
குத்தாலம் அருகேயுள்ள பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திரிஷா(15). இவர் வடமட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். 
இவர் டிச.4-ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
 எனவே, காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு பாலையூர் காவல் நிலையத்தில், திரிஷாவின் தந்தை மனோகரன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com