வட்ட அளவிலான ஓவியப் போட்டி

சீர்காழி வட்ட அளவிலான ஓவியப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

சீர்காழி வட்ட அளவிலான ஓவியப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
சீர்காழி சுபம் லிட்டில் ஏஞ்சல் மழலையர் பள்ளி சார்பில், சிறுவர்-சிறுமிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.
இதில்,  சீர்காழி, கொண்டல், கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயில், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். எல்கேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை பிரிவு ஏ, 2 முதல் 4-ஆம் வகுப்பு வரை பிரிவு பி, 5 முதல் 7-ஆம் வகுப்பு வரை பிரிவு சி, 8 முதல் பிளஸ்-1 வரை பிரிவு டி என வகைப்படுத்தப்பட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவியர் 12 பேர் மற்றும் ஆறுதல் பரிசுக்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி பள்ளிச் செயலர் கியான்சந்த் தலைமையில் நடைபெற்றது. ஓவிய ஆசிரியர் ஜேக்கப் ஞானசெல்வன் நடுவராகப் பங்கேற்று சிறந்த ஓவியங்களைத் தேர்வு செய்து சான்றிதழ்கள் வழங்கினார். 
ஜெயின் சங்க பொறுப்பாளர் தாராசந்த், ஆசிரியர் கனகராஜ், ஆசிரியைகள் கிருத்திகாதேவி, விஜி, அபிராமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com