காலமானார்: முன்னாள் எம்.பி. சுப்ரவேலு

நாகை மாவட்டம், சீர்காழியில் முன்னாள் எம்.பி.   கா. சுப்ரவேலு (86) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை  காலை காலமானார்.

நாகை மாவட்டம், சீர்காழியில் முன்னாள் எம்.பி.   கா. சுப்ரவேலு (86) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை  காலை காலமானார்.
சீர்காழி தென்பாதி பயணியர் விடுதி சாலையில் வசித்து வந்தவர் கா. சுப்ரவேலு. திமுகவில் இருந்தபோது இவர் இரண்டு முறை எம்.பி. யாகவும்,  ஒரு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். 1967-1972 வரை மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராகவும்,  1972-1976 வரை அதே தொகுதியில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1978-1980 வரை சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக மதிமுகவில் தலைமை அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவரது மகள் சாந்தி,  நகராட்சிகள் நிர்வாக துணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 94866 55865.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com