நாகையில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

நாகப்பட்டினத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், நாகை குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

நாகப்பட்டினத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், நாகை குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளை கல்லூரியின் செயலர் பரமேஸ்வரன் தொடங்கி வைத்தார். வடக்குபொய்கை நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இப்போட்டியில்,  நாகை குறுவட்டத்தைச் சேர்ந்த 29 பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
14 வயதுக்குள்பட்டோர், 17 வயதுக்குள்பட்டோர், 19 வயதுக்குள்பட்டோர் என 3 பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் 82 மாணவர்கள், 70 மாணவியர் என மொத்தம் 152 பேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com