மின்னணு குடும்ப அட்டை: நாளை முதல் 4 நாள்கள் சிறப்பு முகாம்

குமரி மாவட்டத்தில்  மின்னணு குடும்ப அட்டை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை18) முதல்  21 ஆம் தேதி வரை 4 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில்  மின்னணு குடும்ப அட்டை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை18) முதல்  21 ஆம் தேதி வரை 4 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து,   மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு  குடும்ப அட்டை அச்சிடப்பட்டு சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.   தற்போது அச்சடிக்கப்பட்டு வரும் மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம்,  செல்லிடப்பேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் சிலருக்கு ஆதார் எண் விவரம் ஆகிய பதிவுகள் இல்லாத காரணத்தினால் அவை அச்சடித்து விநியோகம் செய்ய இயலாமல் உள்ள பட்டியல்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் உள்ளது.
எனவே மின்னணு குடும்ப அட்டை இதுவரை பெறாமல் பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு திருத்தங்கள் செய்து விரைவில்  அட்டை வழங்க ஜூலை 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை  4 நாள்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகளில் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் மற்றும் புகைப்படத்தை ஒப்படைத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com