வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்துக்கு ரூ. 47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சஞ்சய் முன்னிலை வகித்தார். காவல் நிலைய புதிய கட்டடத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து
வைத்தார்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பவுன்ராஜ் (பூம்புகார்), பாரதி ( சீர்காழி), ராதாகிருஷ்ணன்(மயிலாடுதுறை), கூட்டுறவு வங்கித் தலைவர் அவை. பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.