கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: ஜூன் 20-இல் காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை

கட்டாயக் கல்வி உரிமை சட்டம் மூலமான சேர்க்கைக்கு இணையம் வழியே விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாத குழந்தைகளை, ஜூன் 20-ஆம் தேதி

கட்டாயக் கல்வி உரிமை சட்டம் மூலமான சேர்க்கைக்கு இணையம் வழியே விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாத குழந்தைகளை, ஜூன் 20-ஆம் தேதி பள்ளிகளில் உள்ள காலியிடங்களில் சேர்க்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி)-ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையம் வழியே மேற்கொள்ளப்படுகிறது.
இணையம் வழியே விண்ணப்பித்திருந்தவர்களின் குழந்தைகளைத் தெரிவு செய்யும் பணி மே 31-ஆம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது. தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் சேர்க்கைக்கு வராத காரணத்தால், நிலுவையாக உள்ள காலியிடங்களுக்கான சேர்க்கை ஜூன் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.  
எனவே, ஏற்கெனவே இணையம் வழியே விண்ணப்பித்து சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் ஜூன் 20-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடர்புடைய பள்ளிக்கு நேரில் சென்று, காலியாக உள்ள இடங்களில் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com