பள்ளிகளுக்கு இடையேயான சர்வதேச கடற்கரை கைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு இடையேயான சர்வதேச கடற்கரை கைப்பந்து போட்டி பிரெஞ்சு நாட்டில் பாலினேஷியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில், 16 வயதுக்குள்பட்டோர் பிரிவில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஆர். ராபின் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 18 வயதுக்குள்பட்டோர் பிரிவில் மாணவர் அகிலன் நான்காம் இடம் பெற்றார்.
இந்த 2 மாணவர்களையும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், இருவருக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. கஸ்தூரிபாய், நாகை மாவட்ட உடற்கல்வி ஆய்வர் சாந்தி, பயிற்சியாளர்கள் கண்ணன், கலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.