நாகை, மயிலாடுதுறையில் ராகுல்காந்தி பிறந்த நாள்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி,  நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் திங்கள்கிழமை அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி,  நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் திங்கள்கிழமை அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நாகையில்...
இதையொட்டி, நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட பொதுச் செயலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் ரேணுகாதேவி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், வட்டாரத் தலைவர் கலையரசன், விவசாய பிரிவு நிர்வாகி நிக்கோலஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியையொட்டி, சுவாமிக்கு பால், பன்னீர், திரவியப்பொடி, மஞ்சள் பொடி, சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், நெய் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகமும், பின்னர் வண்ண மலர்களால் அலங்கரித்து, மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், வடக்கு பொய்கைநல்லூர் கோரக்கர் சித்தர் ஆசிரமம் ஆகிய இடங்களிலும் அன்னதானம்
வழங்கப்பட்டது.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறையில், நாகை மாவட்ட (வடக்கு) காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தியின் பிறந்த நாளையொட்டி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பால், பிஸ்கட், மயிலாடுதுறை - தரங்கம்பாடி  சாலையில் உள்ள அன்பகம் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் மையத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு  உணவுப் பொருள்கள் ஆகியவற்றை கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். ராஜகுமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி. அன்பானந்தம், பி.ஜி. பத்மநாபன், மாவட்டச் செயலர் சுமதி ஜெயராமன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஆர்.கே. கனகசபை, வட்டாரத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் மற்றும் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் ராகுல்காந்தி மற்றும் கக்கன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு, இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மயிலாதுறை சட்டமன்றத் தொகுதித்  தலைவர் கே. கல்யாணராமன் தலைமை வகித்தார்.
கட்சியின் நாகை மாவட்டச் செயலர்  கே. கமலநாதன், எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவர் கோவி. மதிவாணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் பண்ணை டி. சொக்கலிங்கம்  பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மாவட்ட முன்னாள் தலைவர் ராம. சிதம்பரம், மாவட்டச் செயலர் ராமானுஜம், வட்டாரத்  தலைவர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com