முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, தீபாராதனை நடைபெற்றன.
அதைத் தொடரந்து புனிதநீர் வைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை முழங்கியபடி கடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து கோயிலின் விமானங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனர்.
குடமுழுக்கைக் காண, பெருகவாழ்ந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com