நாகையில் மார்ச் 31-இல்மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மார்ச் 31-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மார்ச் 31-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நாகை விளையாட்டு மைதானத்தில் மார்ச் 31-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. தடகளம், கையுந்துப் பந்து, இறகுப் பந்து, நீச்சல் ஆகிய போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிருக்குத் தனித்தனியே நடத்தப்படும்.
ஆடவர் பிரிவு தடகளப் போட்டிகளாக 100 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப் போட்டிகளும், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், மகளிர் பிரிவில் 100 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப் போட்டிகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடைபெறும். 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் பிரி ஸ்டைல், 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீட்டர் பட்டர் பிளை ஸ்ட்ரோக், 200 மீட்டர் ஐ.எம் ஆகிய நீச்சல் போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிருக்குத் தனித்தனியே நடைபெறும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com