3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் 3 கடைகளின் பூட்டை உடைத்து, திருடிச் சென்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரிய வந்தது.

வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் 3 கடைகளின் பூட்டை உடைத்து, திருடிச் சென்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரிய வந்தது.
திருப்பூண்டி, மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சிவவடிவேலு (65). இவர் திருப்பூண்டி கடைத்தெருவில் அடகுக் கடை வைத்துள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்து 3 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதேபோல், அருகில் ஜவுளிக் கடை வைத்திருக்கும் முகம்மது ஹனிபா (78) என்பவரின் கடையின் பூட்டை உடைத்து,  ரூ. 2 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. மேலும் மீன் வளர்ப்பு வியாபாரம் செய்யும் சக்திவேல் (40) என்பவரது கடையின் பூட்டும் உடைக்கப்பட்டுள்ளது. எனினும் எவ்வித பொருள்களும் திருட்டு போகவில்லை. இதையடுத்து கீழையூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து கீழையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com